கச்சதீவுக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தான்டியதாகக்கூறி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடற்பட்டையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்று மீனவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை 13 மீனவர்களையும் படகுகளுடன் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்ச்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எத்தகைய சூழலிலும் இலங்கை படை பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் வாழ்வாதார பிரச்சனை என்பதால் மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு காயமடைந்த மீனவர்களிடம் இந்திய துணை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசுக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு