தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில்பாடசாலை பஸ் சிக்கியதால் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்குச் செல்லும் வழியில் டெகோலிக்னி கிராமத்தில் ஒரு பாடசாலைபஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர்களூடன் சாரதி ,உதவியாளர் உட்பட 13 பேர் பஸ்ஸில்இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக, அந்த மாணவர்களில் நான்கு பேர் மினி-பஸ்ஸின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கிழக்கு கேப் முதல்வர் லுபாபாலோ ஆஸ்கார் மபுயானே புதன்கிழமை பிற்பகல் ஒரு விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார். மீட்புக் குழுக்கள் இன்னும் உடல்களைத் தேடி வருவதாக அவர் கூறினார்.
தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுவதால் மழை , பனி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான பாதிப்புக்குள்ளான மாகாணங்களில் ஒன்றான கிழக்கு கேப்பில், வெள்ளம் பலரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றியுள்ளது, இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் வீதிகள்கள் மூடப்பட்டுள்ளன என்று மாகாண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்களில் சிலர் உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் டர்பன் ,குவாசுலு-நடால் மாகாணத்தில் 400 பேர் வரை இறந்தனர்.