வெப்பமான காலநிலை நிலவுவதால் பாடசாலை மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையை அமைச்சு வெளியிடும் என களுவெவ தெரிவித்தார். “நாங்கள் சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவோம்,” என்றும் அவர் கூறினார்.
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் கால அளவைக் குறைக்க வேண்டியுள்ளதாக களுவெவ சுட்டிக்காட்டினார்.