புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும். இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்றும் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான கடன் தொகை அரசு வங்கிகளால் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Trending
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்
- நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் விஷால்
- சீன இலங்கை ஊடக உறவுகள் அதிகரிக்கப்படும்
- பிங்கிரியாவில்இலங்கையின் முதல் தேனீ பூங்கா
- சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது குழந்தை
- ட்ரம்ப் புட்டின் பேச்சுவார்த்தை முடிகிறது சண்டை?