பெங்களூரில் நடந்த ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய்த் துறைத் தலைவர் நிகில் சோசலே இன்று கைது செய்யப்பட்டார்.
சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஆர்சிபி அதிகாரியும் ஒருவர். புதன்கிழமை நடந்த துயர கூட்ட நெரிசலுக்குப் பிறகு ஆர்சிபி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) , நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின் நிர்வாகிகளை கைது செய்ய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலட்சக்கணக்கான ரசிகர்கள் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்காக கூடியிருந்ததால் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர்.