Wednesday, February 4, 2026 4:13 pm
புறக்கோட்டை பஸ நிலைய புதுப்பித்தல் சம்பந்தமான மறுஆய்வுக் கூட்டம் இன்று (03) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்கும் அதே வேளையில் கட்டுமானத் தரம், பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் காலக்கெடு கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
மேம்படுத்தப்பட்ட முனையத்தில் சிறந்த பயன்பாடுகள், கழிவு மேலாண்மை, விளக்குகள் மற்றும் காற்றோட்டம் ஆகியவை அடங்கும் என்றும், நெரிசலைக் குறைத்து பயணிகள் வசதிகளை எதிர்பார்க்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

