உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா ,ஒலிம்பிக் சம்பியனான சீனாவின் ஜெங் கின்வென் ஆகிய இருவரும் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான சபலென்கா, ரஷ்யாவின் கமிலா ரகிமோவாவை 6-1, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்.
ஏழாவது நிலை வீராங்கனையான ஜெங், முன்னாள் பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியாளரான அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை தொடக்கச் சுற்றில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்..
ஜெங் இப்போது தொடர்ந்து நான்காவது ஆண்டாக இரண்டாவது சுற்றை எட்டியுள்ளார், பரிஸ் 2024 இல் தங்கப் பதக்கம் வென்றதில் இருந்து ஏழு போட்டிகளுக்கு தனது வெற்றிப் பயணத்தை நீட்டித்துள்ளார். ஜெங் அடுத்து கொலம்பியாவின் எமிலியானா அரங்கோவை எதிர்கொள்கிறார்.
மற்ற இடங்களில், சீனாவின் யுவான் யூ, நான்காவது நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினியிடம் 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
ஆண்கள் பிரிவில், எட்டாவது இடத்தில் உள்ள இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, ஜெர்மன் தகுதிச் சுற்று வீரர் யானிக் ஹான்ஃப்மானை 7-5, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
