பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று கண்டியில் (17) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.
சில பாதாள உலக குழு நடவடிக்கைகள், போதைப்பொருள் கடத்தல் சில அரசியல் ஆசீர்வாதங்களையும் சில பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவையும் பெற்றுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை நிலைநாட்டுவதில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை என்றும், அரசியல் சூழல் மிகவும் நன்றாக உள்ளது என்றும் கூறிய பொலிஸ்மா அதிபர், எந்தவொரு குற்றத்தையும் மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ தன்னிடமிருந்து ஒருபோதும் உத்தரவுகள் வராது என்றும் கூறினார்.
அதற்காக சில அரசியல் ஆசீர்வாதங்கள் பெறப்பட்டுள்ளன. பொலிஸார், அதிகாரிகளிடமிருந்து ஆதரவு பெறப்பட்டுள்ளன. முப்படைகளைச் சேர்ந்தவர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர், போதைக்கு அடிமையானவர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர்.
எனவே இந்த நடவடிக்கைகள் வெளிநாடுகளுக்குச் சென்ற கோழைகள் குழுவால் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து சர்வதேச சமூகத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்றார்.