அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த வைபவத்தில் முனீர் பங்கேற்பதாக உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து சர்ச்சையானது.
இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழலைக் கண்டித்தும், ஜனநாயக விதிமுறைகளுக்குத் திரும்ப வலியுறுத்தியும் வாஷிங்டனில் ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தது.
சர்ச்சைக்கு மத்தியில், அமெரிக்கா இந்தியாவிற்கான தனது மூலோபாய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.