‘வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவில் உள்ள சிலாவத்துறை பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்தவொரு அடக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மேலும் வலியுறுத்தினார்.