வடமாகாண சுற்றுலாப்பணிமனையின் ஏற்பாட்டில் பனை மரத்தின் மகிமையை உலகறிய செய்வோம் என்னும் கருப் பொருளில் பனை சார் உற்பத்தி பொருட்கள் , உணவுகளின் ஆரோக்கியம் ,மருத்துவப் பயன் களை சுற்றுலாப்பயணிகளிடமும் ,உள்ளூர் மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில் பனைத்திருவிழா யாழ் முற்றவெளி திறந்த வெளி விளையாட்டு அரங்கில் வடமாகாண சுற்றுலாப்பணியகம் தலைவர் அ.பத்தி நாதன் தலைமையில் ஆரம்பமாகியது.
முன்னாள் வட மாகா ண பிரதம செயலாளர் ப.இளங்கோவன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கலந்து கண்காட்சியைத் திறந்து வைத்தார். பனை சார்ந்த பனைபழத்திலும்,பனை ஓலைகளில் ஆன பொருட்கள் 18 வகையிலான கண்காட்சிகள் கூடங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி நாளையுடன் நிறைவடையும்.
