இயக்குநர் மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் தயாராகும் படத்தின் இரண்டாவது படப்பிடிப் பில் நடிப்பதற்கு நடிகர் மோகன்லால் கடந்த சனிக்கிழமை இலங்கை வந்தார்.
இலங்கை திரைப்பட படப்பிடிப்புக்கு சிறந்த இடங்களை வழங்குகிறது என்றும், வேலை செய்வதற்கு மிகவும் நட்பு ரீதியான இடம் என்றும் மோகன்லால் கூறினார். இலங்கைக்கு வருகை தருவதை தான் மிகவும் விரும்புவதாகவும், அங்கு மேலும் பல திட்டங்களை படமாக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும், சினிமாவுக்கு புதிய சூழல்களைக் கொண்ட அழகான இடம் இது என்றும் அவர் விவரித்தார்.
ஆண்டனி பெரும்பாவூரின் ஆஷிர்வாத் சினிமாஸ், ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் மம்முட்டி உட்பட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த அட்டவணையில் முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.