Wednesday, August 20, 2025 9:55 am
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக தவிசாளருக்கு அறிவிக்கப்பட்தும் உடனடியாக அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார்
வருடாந்தம் ஏற்படும் வெள்ள அனுத்தங்களின் போது சோரன் பற்று கிராமத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது மட்டுமே அதிகாரிகள் வருகை தந்து கலந்துரையாடுவதாகவும் பின்னர் அவற்றை கைவிட்டு சென்று விடுவதாகவும் இதனால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் கிராம மட்ட அமைப்புக்கள் பச்சிலைபள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர் சுப்ரமணியம் சுரேனிடம் தெரிவித்ததை தொடர்ந்து இதற்கான தீர்வினை கால அவகாசம் இல்லாமல் உடனடி நடவடிக்கையை எடுதாதுள்ளார்
அடுத்து அனர்த்த முன்னாயத்த நிலைமைகளை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து வெள்ளம் வடிந்து ஓடக்கூடிய இடத்தை அடையாளப்படுத்தி அமைப்புகளுடன் சேர்ந்து பிரதேச சபை வடிகால அமைப்பு வசதியை மேற்கொண்டதோடு தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார் அவருடன் சபையின் உபதவிசாளர் சிவகுரு செல்வராஜா ,கிராமமட்ட அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.

