பங்களாதேஷிற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யுஎஸ்ஏஐடி) முடிவைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் நாட்டில் அதன் வளர்ச்சி உதவித் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்டிசி) பங்களாதேஷ், அல்பேனியா ,ஸாம்பியா ஆகிய நாடுகளுக்கான இருதரப்பு வளர்ச்சி உதவியை 2028 இன் இறுதிக்குள் நிறுத்தும் என அறிவித்துள்ளது.
டிசம்பரில் சுவிஸ் பாராளுமன்றம் பட்ஜெட் குறைப்புகளைத் தொடர்ந்து, 2025 சர்வதேச ஒத்துழைப்பு பட்ஜெட்டில் இருந்து 110 மில்லியன் ஃபிராங்க் ($121 மில்லியன்) மற்றும் 2026-2028 நிதித் திட்டத்தில் இருந்து 321 ஃபிராங்க் மில்லியன் குறைக்கப்பட்டது.
பங்களாதேஷுக்கான உதவி திரும்பப் பெறப்படுவது, நாட்டின் முக்கியமான வளர்ச்சி முயற்சிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு, வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாது, பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழலின் எதிர்வினையாகவும் பார்க்கப்படுகிறது.
Trending
- அரபு நாடுகளில் 1,380 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்
- வடக்குமாகாண ஆளுநருடன் ஆசிய வங்கி பிரதி நிதிகள் சந்திப்பு
- அனலைதீவில் ஈபிடிபியின் அலுவலகம் திறப்பு
- மாற்று கருப்பை பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்தார் ஜனாதிபதி
- தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை நிறைவேற்றம்
- 18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி
- சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் இறக்குமதிக்கு அனுமதி