ஸ்பெயின் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க மறுத்ததால் நேட்டோவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப்புடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்பின் அழுத்தத்தின் கீழ், ஜூன் மாதத்தில் நேட்டோ உறுப்பினர்கள் 2035 ஆம் ஆண்டுக்குள் தங்கள் இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்த ஒப்புக்கொண்டனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த இலக்கை நிராகரித்தார், இது “நமது நலன்புரி அரசு நமது உலகக் கண்ணோட்டத்துடன் பொருந்தாது” என்று கூறினார்.