கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலின் கீழ், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் (24) சனிக்கிழமை இடம்பெற்றது.
நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயலின் முன்பாக இடம்பெற்ற இந்த வைத்திய முகாம் “ஆயுர்வேத, யூனானி வைத்திய வாழ்க்கை முறையூடாக நீரிழிவு நோயற்ற நாட்டை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இதில் மிக அதிகளவான நோயாளர்கள் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொண்டதுடன் அவர்களின் இரத்தம் அமுக்க பரிசோதனையையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டனட். உடல்வலி, உடற்பருமன், தோல் நோய்கள், நீரிழிவு, இரத்த அழுத்தம் பெண்கள் தொடர்பான நோய்கள், பக்கவாதம் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கான வைத்திய ஆலோசனைகள் வழங்கப்பட்டன மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மருந்துகளையும் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் யூ.எல்.நிஹாயா, நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்திய குழுவினர் ,த்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்குபற்றினர். அனைவருக்கும் மூலிகை இலைக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
