நாளை, முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி , விநியோகத்தில் ஏற்படும் செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், இந்த திருத்தம் ஆண்டு நடுப்பகுதியில் சரிசெய்தலின் ஒரு பகுதியாகும்.
திருத்தப்பட்ட விகிதங்கள்,வகை சார்ந்த கட்டணங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.