Friday, January 31, 2025 12:15 am
அரச போக்குவரத்தை நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட ஆய்வின் போது தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது உள்ள 5,800 பஸ்களில் 4,500 மாத்தரமே பாதைகளில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்றும், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க 7,400 பஸ்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

