நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை [1] இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.)
வைத்திய சிகிச்சைக்காக அவர் கொழும்பு சென்று இருந்தார். கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்தில் தங்கி இருந்தார்.
சுவாமிகளின் திருவுடல் வெள்ளி ஆதீனத்திற்கு எடுத்து வரப்பட்டு 02.05.2025 மாலை பூரணத்துவ நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று தெரியவருகிறது