நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் நயினை நல்லூர் பாதயாத்திரை நேற்று திங்கட்கிழமை பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன் ஆரம்பமானது.
நயினை முதல் நல்லூர் வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரை 61 வது வருடமாக நயினாதீவு நாக பூசனி அம்மன் ஆலயத்தில் இருந்து இன்று (18/08/2025) ஆரம்பமானது
அகிலம் போற்றும் அகிலாண்ட நாயகி நைனை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நாகம் தாங்கிய வேல் பவனி கடல் மார்க்கமாக குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்து யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வீதி ஊடாக யாழ் நகரப் பகுதியை சென்றடைந்து அங்கிருந்து நல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொள்ளும்.
இரண்டாம் நாளான இன்று (19 )புங்குடுதீவில் இருந்து புறப்பட்டு வேலணை மண்கும்பான் பகுதிகளில் காணப்படும் ஆலயங்களை தரிசித்து மண்கும்பான் பகுதியில் இரண்டாம் நாள் தங்கியிருப்பார்கள். மூன்றாம் நாளான நாளை (20/ ) அங்கிருந்து புறப்பட்டு நணபகல் யாழ் நகரப் பகுதியில் காணப்படும் சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தைசென்றடைவார்கள்
மாலை சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தில் பாதயாத்திரை மேற்கொண்டவர்கள் சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தில் பஜனை பாசுரங்களை பாடி அங்கு இருந்து யாழ் வில்லுன்றி பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு தரித்து நிற்பார்கள்
நான்காம் நாளான வியாழக்கிழமை (21/ ) அதிகாலை நல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொண்டு தேரின் பின்னே இப்பஜனை யாத்திரை தொடர உள்ளது.
