தெஹ்ரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா கோரியதை அடுத்து, சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாக நிற்கின்றன.
2015 ஆம் ஆண்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஜேர்மனியுடனான ஒரு ஒப்பந்தத்தில் சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதியாக தனது முதல் பதவிக்காலத்தில் ஒரு வருடம் கழித்து டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.
அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் “கட்டளைகளை” தெஹ்ரான் நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி ஆகியோருடனான சந்திப்பு நடந்தது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடவில்லை என்பதை நீண்ட காலமாக மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அணுசக்தி நிறுவனம் கடந்த மாதம் தெஹ்ரான் யுரேனிய செறிவூட்டலை “வியத்தகு முறையில்” 90% ஆயுத தர நிலைக்கு அருகில் கொண்டு வருவதாக எச்சரித்தது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு