மோசமான வானிலையால் வானிலையால் 2,641 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நேற்று தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்த சீரற்ற வானிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலையில் இது மேலும் தீவிரமடையத் தொடங்கியது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை மற்றும் பலத்த காற்று வீசியது.
பேரிடர் மேலன்மை மையம் நேற்று வெழ்ளியிட்ட அறிக்கையில், எட்டு மாகாணங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 பேர் காயமடைந்ததாகவும், 2,576 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மொத்தம் 35 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.