இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு 18,000 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் , பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து நிரப்பியான ‘திரிபோஷா’ உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை திரிபோஷா லிமிடெட் நிறுவனம் இறக்குமதி செய்ய உள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, உள்ளூர் சந்தையில் தேவையான தரத்தில் சோளம் இல்லாததே அதிக அளவு சோளத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்ததற்குக் காரணம்.