இயக்குனர் பா ரஞ்சித், தான் எழுதி முடித்த சார்பட்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து உற்சாகமாகப் பேசினார்.
இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், அவரது தற்போதைய படமான வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், சார்பட்டா 2 தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சார்பட்டா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் ஆகியோரின் நடிப்பில் வெளியானது.
கொரோனா காலத்தின் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம், பெரிய அளவில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.அரசியல் , குத்துச்சண்டை கலந்த இந்தப் படத்தின் முதல் பாகம், அதன் நம்பகத்தன்மை மற்றும் கதாபாத்திரங்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டது.
இயக்குனர் ரஞ்சித் அளித்த பேட்டியின்படி, சார்பட்டா 2 முதல் பாகத்தின் தொடர்ச்சியா அல்லது முன் கதையா என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.
ஆனால், முதல் பாகத்தில் மக்கள் எவற்றை எல்லாம் ரசித்தார்களோ, அவற்றை எல்லாம் வைத்து தான் இந்தப் படத்தின் கதையை அவரும் எழுத்தாளர் தமிழ் பிரபாவும் இணைந்து எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு நீடித்து வருவதால், சார்பட்டா 2 படத்தின் ஆரம்பம் குறித்த திகதியை உறுதி செய்ய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல் பாகம் பெற்ற வெற்றி காரணமாக, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.