அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் நேற்று சமர்ப்பித்தது..
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது பல்வேறு கட்சிகளையும் இணைத்து புதிய ஒரு கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிட உள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை நேற்று மாலை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான உறுப்பினர்கள் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பித்தனர்.