செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தும் மோசடி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார,பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், மோசடி செய்பவர்கள் தனது அனுமதியின்றி தனது சாயலைக் கொண்ட போலி விளம்பரங்கள் , வீடியோக்களை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதாக சங்கக்கார கூறினார். இந்த மோசடி விளம்பரங்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
“ஏமாறாதீர்கள். பகிராதீர்கள். அவற்றைப் புகாரளிக்கவும்,” என்று சங்கக்கார வலியுறுத்தினார், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தைப் புகாரளிக்கவும் அழைப்பு விடுத்தார். இந்த AI-உருவாக்கப்பட்ட கிளிப்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று எச்சரித்தார்.