2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
உலக அமைதி ,பாதுகாப்பை நிலைநிறுத்த ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளதாக நெதன்யாகு வலியுறுத்தி, “அவர் அந்த பரிசுக்கு தகுதியானவர்” எனக் கூறி, நோபல் பரிசு குழுவிற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
2025 நோபல் அமைதி பரிசுக்காக இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறுவது, அவரது சர்வதேச அரசியல் பங்களிப்புகள், குறிப்பாக இஸ்ரேல் – அரபு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் அவரது செயல்பாடுகள் காரணமாகவே என அனுமானிக்கப்படுகிறது.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி