2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
உலக அமைதி ,பாதுகாப்பை நிலைநிறுத்த ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளதாக நெதன்யாகு வலியுறுத்தி, “அவர் அந்த பரிசுக்கு தகுதியானவர்” எனக் கூறி, நோபல் பரிசு குழுவிற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
2025 நோபல் அமைதி பரிசுக்காக இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறுவது, அவரது சர்வதேச அரசியல் பங்களிப்புகள், குறிப்பாக இஸ்ரேல் – அரபு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் அவரது செயல்பாடுகள் காரணமாகவே என அனுமானிக்கப்படுகிறது.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!