அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸில் உள்ள ஒரு பெண்கள் முகாமில் இருந்து 23 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, கோடைக்கால முகாமில் இருந்த 700க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இரவு முழுவதும் சில மணி நேரத்தில் 10 25 சென்டிமீற்றர் கனமழை பெய்ததால், குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, அவசரகாலப் பணியாளர்கள் 237 பேரை மீட்டனர். அவர்களில் 167 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
14 ஹெலிகாப்டர்கள்,12 ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்