அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸில் உள்ள ஒரு பெண்கள் முகாமில் இருந்து 23 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, கோடைக்கால முகாமில் இருந்த 700க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இரவு முழுவதும் சில மணி நேரத்தில் 10 25 சென்டிமீற்றர் கனமழை பெய்ததால், குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, அவசரகாலப் பணியாளர்கள் 237 பேரை மீட்டனர். அவர்களில் 167 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
14 ஹெலிகாப்டர்கள்,12 ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி