லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடோரில் டீசல் மானியத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட கலவரத்தால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடோர் நாட்டில் கடந்த சில காலமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா இதுவரை வழங்கி வந்த டீசல் மானியத்தை இரத்து செய்துள்ளார்.
இதனால் டீசல் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளதால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாதுகாப்பு வளையத்தையும் மீற முயன்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், பலரை கைது செய்துள்ளனர்.