Thursday, January 22, 2026 7:01 am
2025 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்த 409 வீதி விபத்துகளில் மொத்தம் 219 பேர் கொல்லப்பட்டனர். 511 பேர் காயமடைந்தனர் என்று புதன்கிழமை ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
அரசு சாரா அமைப்பான சாலை பாதுகாப்பு அறக்கட்டளையின் அறிக்கையின்படி, பாதசாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது அனைத்து இறப்புகளிலும் கிட்டத்தட்ட பாதி (47.03 சதவீதம்) பாதசாரிகளாவர்.
மோட்டார் சைக்கிள்சாரதிகளும் பயணிகளும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர், 43.37 சதவீதம், மீதமுள்ள 9.58 சதவீதம் பேர் பஸ்கள், ரிக்ஷாக்கள், பிற வாகனங்களின் சாரதிகள், பயணீகளாவர்.
வாகனக் குறைபாடுகள், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் ஒரே சாலைகளில் வெவ்வேறு போக்குவரத்து முறைகளை கலத்தல் போன்ற வை வீதி விபத்துகளுக்கு ஒன்பது முக்கிய காரணங்களை இந்த அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.

