விம்பிள்டன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் நேர் செட்களில் 6-3, 6-3, 6-4 என தோல்வியடைந்தார்.
இந்த தோல்வி, 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் ஜோகோவிச்சின் நம்பிக்கையைத் தகர்த்தது மட்டுமல்லாமல், விம்பிள்டனில் அவரது எதிர்காலம் குறித்த ஊகங்களையும் எழுப்பியது.
இந்த வெற்றியின் மூலம், உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ரோஜர் ஃபெடரர், ரபேல் நடால், ஆண்டி முர்ரே , நோவக் ஜோகோவிச் ஆகியோர் இதற்கு முன்னர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதற்கிடையே, நோவக் ஜோகோவிச்சை தொடர்ச்சியாக ஐந்து முறை வீழ்த்திய அரிய சாதனையை ஜானிக் சின்னர் இப்போது படைத்துள்ளார். இந்த சாதனையை இதற்கு முன்னர் கார்லோஸ் அல்கராஸை ஜானிக் சின்னர் மட்டுமே செய்துள்ளார்.
முன்னதாக, காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு போட்டிக்கு முன்பு பயிற்சியைத் தவிர்த்து வந்த நோவக் ஜோகோவிச், முதல் இரண்டு செட்களை இழந்த பிறகு மீண்டும் வருவதற்கான அறிகுறிகளைக் காட்டினார்.
ஆனால் இறுதியில் ஜானிக் சின்னரின் இடைவிடாத ஆட்டத்தை வெல்ல முடியவில்லை.
ஜூலை 13ஆம் திகதி நடைபெறும் பிளாக்பஸ்டர் இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியனான கார்லோஸ் அல்கராஸை ஜானிக் சின்னர் எதிர்கொள்ளவுள்ளார்.