தென் கொரியாவால் டோக்டோ என்றும் ஜப்பானால் தகேஷிமா என்றும் அழைக்கப்படும் இரு நாடுகளுக்கும் இடையில் பாதியிலேயே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு ஜப்பான் மீண்டும் மீண்டும் உரிமை கோருவதற்கு தென் கொரியா சனிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தது.
வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், சர்வதேச சட்டத்தின் கீழும் தென் கொரிய பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் டோக்டோ மீது ஜப்பான் மீண்டும் மீண்டும் நியாயமற்ற முறையில் இறையாண்மையைக் கோருவதற்கு எதிராக தென் கொரிய அரசாங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 0.18 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவுகள், தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றால் உரிமை கோரப்படுகின்றன. தற்போது தென் கொரியாவின் கட்டுப்பாட்டில் இந்தத் தீவுகள் உள்ளது.