ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (2) பிற்பகல் விளக்கத்தை வெளியிட்டது.
கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது.
இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
Trending
- ரி20 கிறிக்கெற்றில் 13,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்தியர்
- கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் முயற்சி
- கின்னஸ் சாதனை படைத்த ஆப்பிரிக்க எலி
- இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக மேற்குக் கரையில் வேலைநிறுத்தம்
- ஏப்ரல் 28க்குள் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க ஏற்பாடு
- இங்கிலாந்து கிறிக்கெற் அணியின் கப்டனாக ஹாரி புரூக் நியமனம்
- சீமானை புகழ்ந்த அண்ணாமலை மோடியை புகழ்ந்த சீமான்
- மோடியின் விஜயத்தின் போது இலங்கை ஊடகங்கள் விலக்கி வைக்கப்பட்டன