சேர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் ஆட்சிக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.
நான்கு மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட முழக்கங்களுடன் மக்கள் திரண்டனர்.
275,000 முதல் 325,000 பேர் வரையான மக்கள் பங்குபற்றிய இப் பேரணியே சேர்பியாவில் நடைபெற்ற மிகப் பெரிய அரச எதிர்ப்புப் பேரணியாகும்.
பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் முயற்சியாக சனிக்கிழமை பெல்கிரேட் நகர போக்குவரத்து இரத்து செய்யப்பட்டது, அதே நேரத்தில் தலைநகருக்குச் செல்லும் வீதிகளில் பெரிய அளவிலான நெரிசல் ஏற்பட்டது.”பாதுகாப்பு காரணங்களுக்காக” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.
கடந்த நவம்பர் மாதம் சேர்பியாவின் இரண்டாவது நகரமான நோவி சாட்டில் நிலையத்தின் கூரை இடிந்து விழுந்து 14 பேர் கொல்லப்பட்டதிலிருந்து தினசரி போராட்டங்கள் நடைபெறுகின்றன.
Trending
- கால்கள் மடிக்கப்பட்டிருந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!