சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் வருடாந்த மாணவர் கௌரவிப்பும் விளையாட்டு போட்டிகளும் நேற்று [14] கலைமகள் கலையரங்கில் விளையாட்டு கழகத்தின் தலைவர் நீல வண்ணன் அனிஸ்ரன் தலைமையில் இடம்பெற்றது.
புதுவருட பிறப்பு நிகழ்வுகளின் பகுதியாக நீச்சல் போட்டி , சதுப்பு நில நடைபோட்டி ,மரதன் ,கிரிக்கெட் , உதைபந்தாட்டம் உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதேவேளை க.பொ.த உயர்தர , சாதாரண தரம் , புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய வீர வீரங்கானைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எவ்.சி .சத்தியசோதி , கௌரவ விருந்தினராக கிராம அலுவலர் நடராஜா சிவரூபன் , மென்பொருள் பொறியாளர் விமலாம்பிகைபாகன் திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

