இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்றும் பெப்ரவரி 3 4 ஆம் திகதிகளில் கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மின்சார பாதுகாப்பு , மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள், பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, மின்விளக்குகளால் கட்டிடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Trending
- ரி20 கிறிக்கெற்றில் 13,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்தியர்
- கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் முயற்சி
- கின்னஸ் சாதனை படைத்த ஆப்பிரிக்க எலி
- இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக மேற்குக் கரையில் வேலைநிறுத்தம்
- ஏப்ரல் 28க்குள் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க ஏற்பாடு
- இங்கிலாந்து கிறிக்கெற் அணியின் கப்டனாக ஹாரி புரூக் நியமனம்
- சீமானை புகழ்ந்த அண்ணாமலை மோடியை புகழ்ந்த சீமான்
- மோடியின் விஜயத்தின் போது இலங்கை ஊடகங்கள் விலக்கி வைக்கப்பட்டன