நெல்லியடியில் இயங்கிவந்த பச்சை குத்தும் கடை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சீல் வைத்து மூடப்பட்டது.
இந்த வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முன் அனுமதி இன்றி இக் கடையைத் திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.
இவ் அறிவித்தலை மீறினால் 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரிவு 78,149 இற்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன் என கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதனால் கையொப்பம் இடப்பட்ட அறிவித்தல் கடையின் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தியமை , துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றமையினால் ர் ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Trending
- டொமினிகனில் கூரை இடிந்து விழுந்து 98 பேர் பலி
- கதிர்காம மாகாண சபையின் முன்னாள் தலைவர் கைது
- 40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளன
- 13 உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கைது
- கோசல நுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
- போராடித் தோற்றது கொல்கத்தா
- காமராஜரின் சிஷ்யர் குமரி அனந்தன் மறைந்தார்
- மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொ ண்ட தருமபுரம் ஆதீனம்