சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று திங்கட்கிழமை இந்தியாவுகுச் செல்கிறார். வருகிறார்.
இந்த பயணத்தின்போது அவர், ஆகஸ்ட் 19 ஆம் திகதி மாலை 5:30 மணிக்கு பிரதமரின் இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை மாலை 4:15 மணிக்கு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வாங் யி தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவரது முதல் சந்திப்பு ஹைதராபாத் மாளிகையில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த நாள், நீண்டகால எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தியா, சீனாவின் எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையேயான 24வது சந்திப்பில் அவர் பங்கேற்பார்.
அவர் புதன்கிழமை காலை புதுடெல்லியில் இருந்து சீனா புறப்பட உள்ளார்.
கிழக்கு லடாக்கில் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் ராணுவ , இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வரும் நிலையில், இந்த வருகை இந்தியா-சீனா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க கட்டத்தில் வருகிறது.
அதிகாரிகள் உயர் மட்ட ஈடுபாட்டை நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த விவாதங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்பாகக் கருதுகின்றனர்.
இருப்பினும், சீனாவின் கடந்த கால செயல்பாடுகள் காரணமாக இந்தியா எச்சரிக்கையுடனேயே அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.