சீனா முழுவதும் ‘ஆண் அம்மாக்கள்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ஆண்களின் அரவணைப்புகளுக்கு பெண்கள் பணம் செலுத்தும் முறை பிரபலமாகி வருகிறது.
ஐந்து நிமிடம் கட்டிப்பிடித்து அரவணைக்கும் இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்கு பொதுவாக சுமார் 50 யுவான் ( இந்திய ருபாவில் 600) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த ஐந்து நிமிட அரவணைப்புகள் அரட்டை செயலிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு ஷாப்பிங் மால்கள் , சுரங்கப்பாதை நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
‘ஆண் அம்மாக்கள்’ என்ற சொல் முதலில் வலிமையான ஆண்களை குறிப்பிட்டாலும், தற்போது இது கருணை, பொறுமை மற்றும் உணர்ச்சி உணர்திறன் போன்ற வளர்க்கும் பண்புகளுடன் உடல் வலிமையை இணைக்கும் நபர்களைக் குறிக்க உருவாகியுள்ளது.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை விரும்பும் பெண்கள், கட்டிப்பிடிப்பதன் மூலம், தங்களை பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் உணர்வதோடு, உணர்ச்சி ரீதியாகவும் நன்மை பயப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதில் பங்கேற்கும் பெண்கள் பெரும்பாலும் ஆளுமை மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் தங்கள் ஆண் அம்மாக்களைத் தேர்வு செய்கிறார்கள், இது ஆறுதல் உணர்வை உறுதி செய்கிறது.
இது தொடர்பான ஊடக அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு மாணவி, ஆய்வறிக்கை தொடர்பான மன அழுத்தத்தைப் போக்க இந்த அரவணைப்பை நாடியதாகக் கூறினார்.
மேலும் அத்தகைய அரவணைப்புகள் பள்ளி நாட்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு உணர்வை மீண்டும் கொண்டு வந்ததாகவும் கூறினார்.