சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் நேற்று நடை பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..டிசம்பரில் பஷர் அல் அசாத் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் சம்பவம் இதுவாகும் ,
தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய அரசின் உறுப்பினர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர் .டமாஸ்கஸில் உள்ள ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் இது நடந்தது, அந்த நேரத்தில் 350 பேர் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியபோது குற்றவாளி முகத்தை மூடியிருந்ததாகவும், மக்கள் அவரை கட்டிடத்திலிருந்து வெளியேற்ற முயன்றபோது தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.
தாக்குதலில் இரண்டு ஆண்கள் ஈடுபட்டதாக ஒரு பாதுகாப்பு வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தது, நுழைவாயிலில் இரண்டாவது துப்பாக்கிதாரி ஒருவரைக் கண்டதாக ஒருவர் பாதிரியார் கூறினார்.
ஞாயிறு ஆராதனை நடைபெற்ற போது தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.