இந்தியாவில் அடுத்த ஆகிண்ண கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில், பெங்களூரின் சின்னசாமி மைதானம் நீக்கப்பட்டுள்ளது.
அந்த மைதானத்திற்குப் பதிலாக, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு மைதானம் அரையிறுதி, இறுதிப் போட்டிகளை நடத்தும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அத்துடன், செப்டம்பர் 30 அன்று தொடக்கப் போட்டியான இந்தியா vs இலங்கை போட்டி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.
இந்த மாற்றம், கடந்த ஜூன் 4-ஆம் திகதி சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த சோகமான கூட்ட நெரிசல் காரணமாக எடுக்கப்பட்டது.
ஆணையத்தின் அறிக்கை காரணமாக, பெங்களூரில் நடைபெறவிருந்த ஐந்து போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும், மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும்.
எனினும், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், போட்டியின் இடம் மாற்றப்படலாம் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
உலகக் கோப்பையை நடத்தவிருந்த முக்கிய நகரமான பெங்களூர் நீக்கப்பட்டுள்ளது, நகரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.