பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22 முதல் 23 வரை சவுதி அரேபியாவிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
2016 , 2019ஆம் ஆண்டுகளில் முந்தைய பயணங்களுக்குப் பிறகு, இது அவரது மூன்றாவது சவூதி அரேபிய பயணமாகும்.
கடந்த செப்டம்பரில் ஜி20 உச்சிமாநாடு மற்றும் மூலோபாய கூட்டு கவுன்சிலின் தொடக்கக் கூட்டத்திற்காக பட்டத்து இளவரசர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசு பயணத்தைத் தொடர்ந்து, இந்தியா-சவுதி அரேபியா மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
இந்த பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்படும் என தெரிகிறது.