புகையிரத விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இனுவில் இந்து விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ஆனந்தராசா சயந்தனின் நினைவாக இணுவில் பஸ்தரிப்பு நிலையம் புனரமைக்கபட்டு இன்று செவ்வாய்க்கிழமை [4] காலை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வருடம் இனுவில் பகுதியில் புகையிரத கடவையில் விபத்துக்குள்ளாகி இறந்த ஆனந்தராசா சயந்தனின் நினைவாக இணுவில் இந்து விளையாட்டு கழகத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1958 ஆம் இணுவில் இந்து விளையாட்டு கழகத்தினால் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் தற்போது புனரமைக்கப்பட்டு அவரது நினைவாக திறந்து வைக்கப்பட்டது.
இணுவில் மத்திய கல்லூரி அதிபர் துரைசிங்கம் , இணுவில் தென்னிந்திய திருச்சபை லங்கேஸ்வரன், அருட்தந்தை ,மக்லியோட் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான தனகோபி , உதயகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.