உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் உள்ளிட்ட வரலாற்று கலைப்பொருட்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, பிரிட்டிஷ் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி தெரிவித்துளளார்.
இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ள லிசா நந்தி புதுடெல்லியில் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தபோது இதை உறுதிப்படுத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைகள் நெருக்கமான கலாச்சார உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதே நேரத்தில் இது நடந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றில் நீண்டகாலமாக பாதித்து வரும் காலனித்துவ பிரச்சினைகளில் ஒன்றை சரிசெய்யும்.
105.6 காரட் வைரமான கோஹினூர், ஒரு காலத்தில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
1849 இல் பஞ்சாப் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களால் இது கையகப்படுத்தப்பட்டது.
அதன் உரிமை இந்தியாவில் உணர்ச்சி மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புள்ளியாக உள்ளது.
இதற்கிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது, லிசா நந்தி, பரஸ்பர கலாச்சார நன்மையின் முக்கியத்துவத்தை நந்தி வலியுறுத்தினார்.
இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மக்கள் பரந்த கலாச்சார கூட்டாண்மையின் ஒரு பகுதியாக அத்தகைய கலைப்பொருட்களை அணுக வேண்டும் என்று கூறினார்.
Trending
- ஈரானின் மூன்று தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
- இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்கு
- டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை சாதனை படைத்த இந்திய ஜோடி
- மொசாம்பிக் பாடகிக்கு எமனான அழகு சிகிச்சை
- ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வீழ்ச்சி
- ஈரானில் சிக்கியஇலங்கை , நேபாள மக்களை வெளியேற்ற இந்தியா உதவி
- ஒவ்வொரு நாளும் சர்வதேச யோகா தினமானால்………….
- 10,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்