புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மலரவுள்ள சர்வதேச சகோதரிகள் தினத்தை கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் மாலை 4.00 மணிக்கு கொண்டாடவுள்ள தென அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்தார்.
பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், பெண்பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளன.
பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறும்படத்துக்கான கதை சொல்லலும் நடைபெறவுள்ளது. நேரில் கலந்து கொண்டு கதை சொல்ல முடியாதவர்கள் பிரதிகள் மூலம் கலந்து கொள்ள முடியும்.
பிரதிகள் அன்றைய தினம் வாசிக்கப்பட்டு அவையோரின் தீர்ப்புக்கு ஏற்ப ஒரு கதை தெரிவு செய்யப் படுவதுடன் அது திரைவடிவம் பெறும். இதில் கலந்து கொள்ள விரும்பு வோர் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறியலாம்