இரண்டு சீன நாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் ஃபுசேரியம் கிராமினேரம் என்ற அழிவுகரமான பயிர் பூஞ்சையை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ஒரு உயர்மட்ட எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல சீன நிபுணரும் போரை நோக்கிச் செல்லும் சீனா (China Is Going to War) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான வழக்கறிஞர் கோர்டன் ஜி சாங், இந்தச் செயலை ஒரு சாத்தியமான வேளாண் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று விவரித்துள்ளார்.
இது கொரோனாவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறார்.
எஃப்பிஐ குற்றவியல் புகாரின்படி, 34 வயதான சீன ஆராய்ச்சியாளர் ஜுன்யோங் லியு, ஜூலை 2024 இல் தனது காதலி யுன்கிங் ஜியானைச் சந்திக்கும் போது இந்தப் பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சீனாவுடனான ராஜதந்திர உறவுகளை முற்றிலுமாக துண்டிக்க சாங் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கொரோனா
அமெரிக்க நீதித்துறை இதை ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமி என்று முத்திரை குத்தியுள்ளது, இது வேளாண் பயங்கரவாதத்திற்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.