2025 ஆம் ஆண்டு கிளப் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு மொத்தம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பீபா புதன்கிழமை அறிவித்தது.
32 அணிகள் பங்கேற்கும் கிளப் உலகக் கிண்ண முதல் போட்டி 2025 ஜூன் முதல் ஜூலை வரை அமெரிக்காவில் நடத்தப்படும். இது இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பங்கேற்கும் கிளப்புகளுக்கு ஒரு பில்லியன் விநியோகிக்கப்படும்.
“போட்டியின் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயும் பங்கேற்கும் கிளப்புகளுக்கும், உலகம் முழுவதும் உள்ள கிளப் ஒற்றுமை வழியாகவும் விநியோகிக்கப்படும், ஏனெனில் பீபா ஒரு டாலரைக் கூட வைத்திருக்காது.
மகளிர் கிளப் உலகக் கிண்ணப் போட்டி 2028 இல் நடைபெறும் என்றும், உலகின் 19 முன்னணி கிளப்புகள் பங்கேற்கும் போட்டி வடிவத்தைக் கொண்டிருக்கும் என்றும் பீபா தெரிவித்துள்ளது.
2031 ,2035 ஆண்டு மகளிர் உலகக் கிண்ணப் போட்டிக்கான ஏல நடைமுறையை பீபா அறிவித்தது, ஆப்பிரிக்கா ,வட அமெரிக்காவுடன் இணைந்த உறுப்பினர் சங்கங்கள் 2031 ஆம் ஆண்டு ஏலம் எடுக்க அழைக்கப்பட்டன, அதே நேரத்தில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய சங்கங்கள் 2035 போட்டிக்கு ஏலம் எடுக்க அழைக்கப்பட்டன.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை