காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் தான் காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் கழுதைகளை குறிவைத்து திருடி பிரான்ஸ் , பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வருகிறதாம்.
காஸா மக்களுக்கும் ஹமாஸுக்கும் உதவும் கழுதைகள் மீது இஸ்ரேலின் பார்வை விழுந்துள்ளது.
காஸாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காஸா மக்கள் தங்களின் போக்குவரத்துக்கும், சுமைகளை சுமக்கவும், இடம்பெயரவும் கழுதைகளை தான் பயன்படுத்தி வருகி்னறனர். தண்ணீர், உணவு ,ம் இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் கழுதைகளை திருடி வெளிநாடுகளுக்கு இஸ்ரேல் இராணுவம் அனுப்பி வருகிறது.
இதன்மூலம் காஸாவில் தற்போது உள்ள மக்கள் இன்னும் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இதனால் நாளடைவில் அவர்கள்காஸாவை விட்டு மொத்தமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படலாம் என இஸ்ரேல் நினைக்கிறது.
இந்த கழுதைகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பண்ணைக்கு மொத்தமாக மாற்றப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபற்றி இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‛‛காஸாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கழுதைகள் முதற்கட்டமாக பிரான்ஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டன. பெல்ஜியத்துக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கழுதைகள் மீண்டும் காசாவிற்கு வராது. இது உள்ளூர் மக்களை வெகுவாக பாதிக்கும். இதனை குறிக்கோளாக வைத்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.