காதலர் தினத்தில் பிக் பாஸ் ஜாக்குலின் தனது காதலரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து, Instagram பக்கத்தில் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜாக்குலின். இவர் 100 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்த நிலையில், இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணப்பெட்டியை எடுக்கும் ஆசையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வராததால், அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், சில தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஜாக்குலின் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, தனது காதலரை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பிரபல புகைப்படக் கலைஞர் யுவராஜ் செல்வநம்பி தான் தனது காதலர் என்று கூறி, லவ் எமோஜியை பதிவு செய்துள்ளார்.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி