பேலியகொட பொலிஸாரால் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, களனியின் கலேதண்ட, கோனாவல பகுதியில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சித்திரவதை கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் கடத்தல் நடவடிக்கை நீண்ட காலமாக செயல்பட்டு வந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
கடத்தல்காரர்கள் களனி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கடனுக்கு போதைப்பொருட்களை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களை அதிகாரிகள் மீட்டனர். இந்த வலையமைப்பில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் மூன்று சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகபொலிஸார் த்ரிவித்தனர்.